Description

கதைக்கடல் மதனவேகனின் காதல் (மாயாஜாலம்,சரித்திரக் கதை)

பெரியவர் நாராயண ஐயர் அவர்கள் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் புலமையாளர் தீர்க்க தரிசனம் வாய்ந்தவர். நான் எழுதுவதற்கு பெரிதும் ஊக்கம் அளிப்பவர்.

ஒருமுறை அவரின் சந்திப்பின்போது பெரியவரிடம் சம்ஸ்கிருத நூலின் பிரதி ஒன்றைக் கண்டேன். அது என்ன நூல் என நான் கேட்கும் முன்னே,”உனக்காகவே மைசூரிலிருந்து எடுத்து வந்திருக்கிறேன். சோமதேவர் இயற்றிய ‘கதாசரித் சாகரா’ என்றார். என் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இந்நூலைக் குறித்து நான் சேகரித்தக் குறிப்புகளை காணலாம்.

இப்பகுதி பல நூல்களிலிருந்து சேகரித்தவை. சராசரி வாசகர்களைக் காட்டிலும் விமர்சகர்கள், ஆய்வாளர்களைக் கருத்தில்கொண்டு இப்பகுதியை வெளியிட்டுள்ளேன்.

Additional information

Weight .438 kg