Description
ஆதலையூர் சூரியகுமார் தமிழகம் அறிந்த எழுத்தாளர். குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், தினமலர் தினமணி என்று அத்தனை பத்திரிகைகளும் நடத்திய சிறுகதை, கவிதைப் போட்டிகளில் பரிசுகளை அள்ளி குவித்தவர். தனது படைப்பில் ஏதாவது ஒரு சமூக சிந்தனை இருக்க வேண்டும் என்ற கவனத்தோடு எழுதிவருபவர். –
‘இதோ ‘வானம் தேடும் வானம்பாடிகள் என்ற இந்த நாவலில் கல்லூரியில் பயிலும் சமூக சிந்தனை கொண்ட ஒரு மாணவன், அதே சிந்தனையோடு அந்த கல்லூரியில் சேரும் ஒரு மாணவி அவர்களிடையே உருவாகும் நட்பு.. எப்படி அந்த கல்லூரியின் அடையாளத்தை அழகாக மாற்றுகிறது என்று விவரிக்கிறார். கல்லூரி, மாணவர்களின் ஆற்றலையும் சக்தியையும் உயர்த்திப் பிடிக்கிற ஒரு கதை. அத்துடன் காதலும் சேர்ந்து கொண்டால் களைகட்டும் தானே!