Description

மதுரை, டாக்டர் புலவர் வை.சங்கரலிங்கனார் அவர்கள் தமிழகம் அறிந்த பண்பாளர். ஆசிரியப் பணியில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு
வழிகாட்டியவர். மாணவர்களின் ஒளிவிளக்காக திகழ்ந்தவர். இவருடைய உரை கேட்டு உற்சாகம் பெறுபவர்கள் பலர். தன்னைப்போலவே அடுத்தவர்களையும் உற்சாகப்படுத்தி உயர வைக்கவேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் கொண்டவர். பாரத ரத்னா, எம்.ஜி.ஆர். அவர்கள் பற்றி ஒரு புத்தகம் படைத்திருப்பது என்பது மிகவும் பொருத்தமானது.
“ஒரு வரலாறாகவே வாழ்ந்து காட்டிய புரட்சித்தலைவரின் வாழ்க்கை என்பது திரையுலகினருக்கு மட்டுமல்ல ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பாடமாக இருக்கிறது என்பது எம்.ஜி.ஆரின் வரலாற்றைப் படிப்பவர்களுக்கு நிச்சயம்
தெரியும். இளைய தலைமுறைக்கு அதை எளிய சொற்களின் மூலம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அக்கறையுடன் இந்த நூலைப் படைத்திருக்கிறார். தமிழ்
வாசகர்கள் இந்த நூலைப் படிப்பதன் மூலம் நிச்சயமாக ஒரு சுற்று உயர்வார்கள் என்பது உறுதி.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.