Description

1944, பிப்ரவரி 19,20 ஆம் நாட்களில் கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிட மாணவர் மாநாட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவரான பேராசிரியர் கலந்து கொண்டு ஆற்றிய உரை அண்ணாவின் பாராட்டுடன் ;திராவிட நாடு’ இதழ்களில் வெளியிடப்பட்டது.  அதுவே, இந்நூலின் முதல் பகுதியாக அமைந்துள்ளது.  இதனை அடுத்து 1953 ல் சிதம்பரத்தில் நடந்த சமூகச் சீர்திருத்த மாநாடு, 1967 ல் சென்னையில் நடந்த நான்காவது மாநில மாநாடு என 13 மாநாட்டு முழக்கங்கள் இந்நூலில் தொகுத்தளிக்கப் பெற்றுள்ளன.