Description

பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈரோடு வெங்கடப்பா இராமசாமி , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.

  • 1879 : செப்டெம்பர் 17, ஈரோட்டில் பிறந்தார். பெற்றோர்: சின்னத்தாயம்மை-வெங்கட்ட நாயக்கர்.
  • 1885 : திண்ணைப்பள்ளியில் சேர்ந்தார்.
  • 1891: பள்ளிப்படிப்பை விட்டு நிறுத்தப்பட்டார்.
  • 1892 : வாணிபத்தில் ஈடுபட்டார்.
  • 1898 : நாகம்மையை (அகவை-13) மணந்தார்.
  • 1902 : கலப்புத்திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்துச் சமயத்தினர், சாதியினருடன் சேர்ந்து விருந்துண்டார்.
  • 1904 : ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார். (அக்குழந்தை ஐந்தாம் மாதத்தில் இறந்தது. பின்னர் குழந்தையே இல்லை.)
  • 1907 : பேராய இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ஈரோட்டில் கக்கல் கழிச்சல் நோய் பரவியபோது, யாரும் உதவிக்கு முன்வராத நிலையில் துணிந்து மீட்புப்பணியாற்றினார்.
  • 1909 : எதிர்ப்புக்கிடையில் தங்கையின் மகளுக்கு கைம்மைத் திருமணம் செய்துவைத்தார்.
  • 1911 : தந்தையார் மறைவு.
  • 1949 : மணியம்மையை மணந்தார்.
  • 1973 : உடல் நலம் குன்றி இறந்தார்.  மேலும் இந்நூலில் பெரியாரின் வரலாற்றினை முழுமையாக அறிந்துகொள்வோம்.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.