Description
சிற்றிலக்கியக் காலத்தில் தோன்றிப் புகழ் பெற்று விளங்கிய இலக்கிய வகைகளுள் தனக்கென்று தனி இடத்தையும் சிறப்பையும் பெற்று விளங்குவது அந்தாதி. அந்தாதி இலக்கியக் கூறுகள் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன எனினும் முழுமையான வடிவில் அந்தாதி இலக்கியத்தைப் படைத்தருளியவர் காரைக்காலம்மையார். இவ்வகையில் இவரது படைப்பான அற்புதத் திருவந்தாதியே முதலாவதாகும். ஒரு பாட்டின் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி என்னும் நான்கில் ஏதேனும் ஒரு கூறு அடுத்த பாட்டின் தொடக்கமாக அமையுமாறு இலக்கியம் படைப்பதே அந்தாதி எனப்படும். இதை மண்டலித்தல் என்றும் குறிப்பிடுவர்.
அந்தாதி இலக்கியங்களுள் சிறப்பானதாகக் கருதப்படும் அபிராமி அந்தாதி அபிராமி பட்டரால் இயற்றப்பட்டதாகும். இவ்வந்தாதி நூல் காப்பு மற்றும் நூற்பயன் ஆகிய இரு செய்யுள்கள் நீங்கலாக அந்தாதித் தொடையில் நூறு பாடல்களைப் பெற்றிலங்குகிறது.





Reviews
There are no reviews yet.