Description
பழகுதமிழில் பாட்டெழுதி பவனிவந்த மாபெரும் கவிஞர்களில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தலைசிறந்து
விளங்குகிறார். சிந்தனைத் தெளிவும் சந்த நடையும் சந்தனம் போல் மணக்கும் கவிதை அழகும் காலத்தை வென்று நிற்கும் வண்ணப் பிழம்பாக எண்ணத்தை ஈர்க்கும் கவிதைத் தொகுப்பே அழகின்சிரிப்பு. அழகு எங்கெங்கு கொட்டிக்கிடக்கிறது. என்பதைத் தொகுத்து 16 கவிதைகளில் 16 பேறு களைப் போல் பளிச்சிடச் செய்துள்ளார் பாவேந்தர். சங்க இலக்கியம் வாழ்க்கையுடன் வரிசைப்படுத்துவதைப் போல சமுதாய வாழ்வியலுடன் சங்கமிக்கச் செய்யும் வண்ணம் ஒவ்வொரு கவிதையும் அமைந்து உள்ளத்தைக் கொள்ளைகொள்கிறது.








Reviews
There are no reviews yet.