Description
“ஆரி ய மாயை” என்னும் இந்நூல் விடுதலைக்கு முற்பட்ட இந்தியாவில் 1941இல் அண்ணாதுரையினால் எழுதப்பெற்ற நூல்.
இது ஆரிய மாயையினால் தமிழர்கள் சிக்கித் தவிக்கும் நிலையைப் பல்வேறு சான்றுகளுடன் முன்வைக்கிறது. ஆரியர்களின் பூர்வீகம் குறித்தும், அவர்களது பரவல் குறித்துமான பல்வேறு ஆய்வறிஞர்களின் கருத்தை எடுத்துரைக்கிறது. இத்தகு சிந்தனைகள் அந்நாளில் மக்களின் மனதில் புரட்சியை உண்டாக்கியமையால் 1943 ஆம் ஆண்டு இந்நூல் தடைசெய்யப் பெற்றது. இது மட்டுமன்றி அண்ணாவிற்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையையும், 700 ரூபாய் அபராதத்தையும் விதிப்பதற்குக் காரணமாக இருந்த நூல். இத்தகு வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்ட இந்நூல், ஆரியர்களைப் பற்றி இன்றைய மக்கள் அறியவும், ஆரிய மாயையால் கண்டுள்ள தங்கள் நிலையை உணரவும் வழிகாட்டக் கூடியது.







Reviews
There are no reviews yet.