Description
உலகப் பொதுமறையாக உள்ள இத் திருக்குறள் அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டியது அவசியம். இந்நூல் தோன்றிய காலம் தொடங்கி, இன்று வரையில் பல்வேறு உரைகள் எழுந்துள்ளன. அவற்றுள் திருக்குறளைப் போன்றே அதற்குச் சுருக்கமாக உரை எழுதும் போக்கு ஒன்று உருவானது. இதன்மூலம் சிறிய நூலாக அனைவருக்கும் திருக்குறள் சென்று சேர்ந்தது. மேலும் உரையுடன் கூடிய பல கையடக்கப் பதிப்புகளும் வெளியாயின. திருக்குறளை எளிய நடையில் விளங்கிக் கொள்வதற்கு ஏற்றவாறு சுருக்கமான உரை வகுத்தவர்களுள் புலியூர்க்கேசிகனும் ஒருவர். இவர் தமிழ் இலக்கியங்கள் பலவற்றுக்கு பதிப்புரை எளிய நடையில் உரை வகுத்தவர்.







Reviews
There are no reviews yet.