Description
இலக்கணம் என்பது தமிழ்மொழியின் வரப்பு: வேலி. இலக்கணம் வரப்பாக அமைந்து, மொழியின் எல்லையை நமக்கு
வரையறுத்துக் காட்டுகிறது. இலக்கணம் வேலியாக நின்று, வேற்றுமொழி வந்து தமிழ்மொழியை மேய்ந்துவிடாதபடி காத்து நிற்கின்றது. அந்த வரப்பை – வேலியை முதன் முதலில் அமைத்தவர் ஒல்காப் புகழ்மிக்க தொல்காப்பியரே. அதற்கடுத்து நன்னூலார் அமைத்தார். அடுத்துப் புலவர் குழந்தை “இன்னூல்” என்று எழுதி அமைத்தார்.
தொல்காப்பியத்திற்கு – இளம்பூரணர் முதலாகப் பலர் உரை வரைந்தனர். நன்னூலுக்கு மயிலைநாதர் முதலாகப் பலர் உரை வரைந்தனர். “இன்னூ”லுக்குப் புலவர் வடிவேலனார் முதலாவதாக உரை வரைந் துள்ளார்.
இன்னூல் என்னும் இலக்கண நூலை அறிந்து கொள்ளவும் – இலக்கணப் பொருளை அறிந்து கொள்ளவும் – எளிய தமிழில்
அரிய எடுத்துக்காட்டுகளுடன் இந்நூலைத் தந்துள்ளார்.






Reviews
There are no reviews yet.