Description
பழமொழி நானூறு என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. செம்மொழித் தமிழ் இலக்கியங்களுள் இடம் பெற்றுள்ளது. வழக்கத்திலிருந்த பழமொழிகளில் தேர்ந்தெடுத்த நானூறு பழமொழிகளை இடம்பெறச் செய்யும் வகையில் அமைந்த வெண்பாக்களை உடையது. அவையடக்கம் கடவுள் வாழ்த்து உட்பட 401 பாடல்களைக் கொண்டுள்ளது. ஐந்து பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிப்புகள் பொருண்மை அடிப்படையில் அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஒவ்வொரு வெண்பாவின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதைக் காணலாம். கல்வி, சான்றோர் இயல்பு, பொருளைப் போற்றுதல், அரசியல், இல்வாழ்க்கை என அமைந்திருப்பதை எண்ணிப் பார்க்கலாம்.








Reviews
There are no reviews yet.